இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்து

பள்ளியின் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர் செவங்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பள்ளியின் பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி
   
        நம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் பள்ளியின் கல்விப் புரவலரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான திரு.கோ. நடராஜன் அவர்கள் ரூ.10000/- பத்தாயிரத்திற்கான காசோலையைத் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்களிடம் வழங்கினார். மேனாள் உடற் கல்வி ஆசிரியர் திரு.து.முருகேசன் அவர்கள் உடன் உள்ளார்.




வெள்ளி, 30 நவம்பர், 2018

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு










பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் இன்று 30 11 2018 காலை 10 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு வின் நிர்வாகிகளான திருவேங்கடம், ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் தேவை, சுகாதாரம் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டன.















செவ்வாய், 27 நவம்பர், 2018

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

                    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச்  சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.