இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 7 டிசம்பர், 2015

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு 

                          இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிகழ்வில் தற்போது பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அறுபத்தொரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவற்றை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமிகு.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. பாண்டியன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளாளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், கட்டடக் குழுத் தலைவர், ஊரார் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக