இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 7 டிசம்பர், 2015

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு 

                          இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிகழ்வில் தற்போது பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அறுபத்தொரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவற்றை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமிகு.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. பாண்டியன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளாளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், கட்டடக் குழுத் தலைவர், ஊரார் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதன், 7 அக்டோபர், 2015

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா2015




அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

நாள்: 08/10/2015 வெள்ளிக்கிழமை               நேரம்:  முற்பகல் 10 மணி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை&வரவேற்புரை:   திரு.பா.பாண்டியன் அவர்கள்,  தலைமைஆசிரியர்

முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்ஊராட்சித்தலைவர்,
                            இலந்தக்கோட்டை

மடிக்கணினிகள் வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள்,
                         வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்

வாழ்த்துரை:   திருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்

                      திரு.கண்ணன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்

                     திருமதி.காஞ்சனா பாண்டியன்அவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்

                      திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்

                     திரு.ராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்

                     திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத் தலைவர்

                     திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்

                     திரு. சுப.ரெங்கசாமி அவர்கள், மேனாள் பெ.ஆ.க.தலைவர்
                          மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:   திரு.வெ.பாலகிருஷ்ணன் அவர்கள் முதுகலையாசிரியர்

தொகுப்புரை:  திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்

நாட்டுப்பண் 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

சுதந்திரதின விழா நிகழ்வுகள் - 2015



சுதந்திரதின விழா நிகழ்வுகள் – 2015

          இந்தியாவின் 69 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  காலை ஒன்பது மணியளவில் இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஆ.மோகன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

        உறுதிமொழி, சர்வசமய வழிபாட்டைத் தொடர்ந்து விழாக் கொண்டாட்டம் தொடங்கியது.  இந்த விழாவிற்குப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் திரு. பா. பாண்டியன் எம்.எஸ்சி.,எம்.எட்.,எம்.பில்.,  அவர்கள் தலைமை தாங்கிச் சுதந்திர தினப் பேருரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் மாணவர்கள்  இந்தக் கல்வியாண்டில் மாவட்ட மாநிலச் சாதனைகள் செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ஊக்கமூட்டினார்.  முன்னதாகப் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு.வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

        இந்த விழாவில் வேடசந்தூர்ப் பகுதி மாதினிப் பட்டியைச் சேர்ந்த திரு. தனஞ்செயன் என்பாரது அய்யாதுரை பாண்டியன் நினைவு அறக்கட்டளை சார்பாக கடந்த அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் கேடயங்களும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

       அடுத்து அதே போல மாணவர் சாதனையாளர்களுக்கு அபிநயா நினைவு அறக்கட்டளை சார்பாகவும், பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பினரின் இளைய பாரதம் அறக்கட்டளை சார்பிலும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

       பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தி.கலாவதிக்கும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கீர்த்தனா, சுதர்சனன் ஆகியோருக்கு இலந்தக்கோட்டை பகுதியில் உள்ள தமிழிசை நண்பர்கள் குழு சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

      SBCC நண்பர்கள் குழு சார்பாகப் பள்ளிக்கு ஒரு மின் குழல் விளக்கு வழங்கப்பட்டது.

      இந்த விழாவில் பள்ளியின் கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளர் திரு. இராமமூர்த்தி, கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், அய்யா துரை பாண்டியன் அறக்கட்டளை சார்பாக திரு. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

      மாணவர்களின் உரைவீச்சு, ஆடல், பாடல், கவியரங்கம், கோலாட்டம் முதலான கலைநிகழ்ச்சிகள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாயின.

      பள்ளியின் இளநிலை உதவியாளர் திரு.கோவிந்தசாமி அவர்கள் “காக்க வேண்டும் சுதந்திரம்” எனும் தலைப்பில் கவிதை வாசித்தார்.

பள்ளியின் தமிழாசிரியர் திரு. கொ.சுப.கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றினார். பள்ளியின் கணினி பயிற்றுநர் திருமதி.இல.கோகிலா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்பு





புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்பு

       நம் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக 14/08/2015 பிற்பகலில் இருந்து       திரு. பா. பாண்டியன் எம்.எஸ்சி.,எம்.எட்.,எம்பில்., அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

      இவர் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைக் கணித ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். இவரது நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளி பல சாதனைகள் புரிய வாழ்த்துகின்றோம்.


தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - பிரியாவிடை விழா





தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - பிரியாவிடை விழா

      நம் பள்ளியில் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பாகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர் திரு.அ.வடிவேல் எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., அவர்கள் பணியிட மாறுதலில் 14/08/2015 பிற்பகல் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். 

      காட்சிக்கு எளியனாக கடுஞ்சொல் அல்லாதவராகச் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அரவணைத்துச் சென்ற திரு. வடிவேல் அவர்கள் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தொடங்கிய காலம் தொட்டு இதுவரை பெற்றிராத அளவு உச்ச மதிப்பெண்ணைப் பெற வைத்தவர்.

      தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய போதும் ஒரு தந்தையாக, தோழனாக இருந்து எந்தப் பிரச்சனைகளுக்கும் தோளோடு தோள் கொடுத்துத்  தாங்கியவர். பணியிட மாறுதலில் செல்லும் அவருக்குப் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கினார்.

       மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க அவர்தம் கண்களும் கசிய பிரியா விடை கொடுத்தார்.  நம் தலைமை ஆசிரியர் திரு. வடிவேல் அவர்கள் அடுத்தடுத்து கல்வித் துறையில் பல பதவி உயர்வுகள் பெற்று வலம் வர இந்த வலைப்பூ மலர் தூவி வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறது. 


வாழ்க வளர்க திருவாளர் வடிவேல் அவர்களே!

விலையில்லா மிதிவண்டி வழங்கும் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா



விலையில்லா மிதிவண்டி வழங்கும் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா


                இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 11/8/2015 செவ்வாய்க் கிழமை அன்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் பொதுத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

             இந்த விழாவில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. எஸ்.பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.  காலை பதினொரு மணியளவில் தொடங்கிய இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.வடிவேல் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.  இலந்தக்கோட்டை ஊராட்சிமன்ற உறுப்பினர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். 

            இந்த விழாவில் இக்கல்வியாண்டில் பதினோராம் வகுப்புப் பயிலும் முப்பத்தாறு மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.  மேலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கலாவதி, ரோஜா, ராஜலட்சுமி மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கீர்த்தனா, கோகுல், கவிதா ஆகியோருக்கு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு எஸ். பழனிச் சாமி அவர்களின் தமது சொந்த நிதியில் இருந்து பரிசுத் தொகையுடன் பாராட்டுக் கேடயங்களும் வழங்கப்பட்டன.  
           
              மேலும் இந்த விழாவில் குஜிலியம்பாறை ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி.நாகம்மாள், பாளையம் பேரூராட்சித் தலைவர் திரு. பெருமாள், இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு. பெருமாள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வெங்கட்ராமன், பொருளாளர் திரு. இராமமூர்த்தி, கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், பள்ளியின் கட்டடக் குழுத் தலைவர் திரு நம்பெருமாள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் திரு சுதந்திரமணி மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

              பள்ளியின் தமிழாசிரியர் திரு கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றினார். பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் திருமதி.பாரதமணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா




அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா

  நாள்: 11/08/2015 செவ்வாய்க் கிழமை               நேரம்:  முற்பகல்

                                              நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை & வரவேற்புரை:   திரு. அ. வடிவேல் அவர்கள், தலைமைஆசிரியர்
முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்ஊராட்சித்தலைவர்,
                           இலந்தக்கோட்டை

மிதிவண்டிகள், பரிசுகள் வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள்,
                         வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்

வாழ்த்துரை:  திருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்
              திரு. நல்லசாமி அவர்கள், ஒன்றியத் துணைத் தலைவர்
                      திருமதி.காஞ்சனா பாண்டியன்அவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்
             திரு.பெருமாள் அவர்கள், ஊராட்சித் துணைத் தலைவர்
                     திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                    திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத்
                                                        தலைவர்
                    திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
            திரு.மணிமுத்து அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்
            திரு. நாகராஜன் அவர்கள் வட்டார ஊராட்சி அலுவலர்                                            மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:  திருமதி.ப.கோ. பாரதமணி அவர்கள்,
                   முதுகலைத்தமிழாசிரியர்

தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண்